#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஊதியூர்

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஊதியூர் 161.#அருள்மிகு_உத்தண்ட_வேலாயுத_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : உத்தண்ட வேலாயுத சுவாமி ஊர் : ஊதியூர் மாவட்டம் : திருப்பூர் ஸ்தல வரலாறு: கொங்கு நாட்டில் கந்தப் பெருமான் கோயில் கொண்ட மலைகளுள் ஒன்றாக இருப்பதால் இது தனிச்சிறப்பு பெற்றதாகப் போற்றப்படுகிறது. தமிழகத்தில் தோன்றிய சித்தர்களுள் மிகவும் முக்கியத்துவம் பெறுபவர் அகத்திய முனிவர். இவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் தங்களின் யோக ஆற்றலைப் பயன்படுத்தி பசியால் வாடிய மக்களின் குறைகளைத் தீர்த்து வந்தனர். ஒருசமயம், காங்கய …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வானமாதேவி

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வானமாதேவி 159.#அருள்மிகு_கோலவிழி_அம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கோலவிழி அம்மன் ஊர் : வானமாதேவி மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: வானமாதேவி என்ற இத்திருத்தலம் சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளால் கூற்றாயினவாறு என்ற பதிகம் பாடி இறையருளால் சூலைநோய் தவிர்த்து சமணத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய வரலாறு நடைபெற்ற திருவதிகை வீரட்டத்திற்குக் கிழக்கேயும், திருமங்கையாழ்வாரால் மங்களாஸாசனம் செய்யப் பெற்றதும் வேதாந்த தேசிகரால் பாடப்பெற்றதுமான 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவந்திபுரத்திற்கும், திருஞானசம்பந்தராலும், அருணகிரிநாதராலும் பாடப்பெற்ற திருமாணிகுழி …

#மலை_பார்வதி:

July 4, 2023 0 Comments

#மலை_பார்வதி: மணக்கரை மலை பார்வதி தாயை பார்க்க என் அன்பு சகோதரிகளுடன் 30/06/23 அன்று பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படம். 2 km தான் பயணம் என்றாலும் வார்த்தைகளில் கொண்டு வரவே முடியாத அளவிற்கு ஒட்டுமொத்த பிரபஞ்ச பேராற்றலும் நிறைந்த இடமாக மணக்கரை பார்வதி தாய் சிவனுடன் குடியிருக்கும் இந்த இடத்தை கருதுகின்றேன். உலகின் முதல் அதிசயம் மணக்கரை பார்வதி குடியிருக்கும் இந்த மலையை என பதிய வைக்க ஆசைப்படுகின்றேன். சென்று வென்று நன்று வந்த …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குறுமாணக்குடி

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குறுமாணக்குடி 158.#அருள்மிகு_கண்ணாயிரமுடையார்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கண்ணாயிரமுடையார் அம்மன் : முருகுவளர்க்கோதை நாயகி, சுகுந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : கொன்றை மரம் தீர்த்தம் : இந்திர தீர்த்தம் புராண பெயர் : கண்ணார்கோவில், குறுமாணக்குடி ஊர் : குறுமாணக்குடி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே சென்ற சமயம் அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வரகுணமங்கை

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வரகுணமங்கை 154.#அருள்மிகு_விஜயாஸனர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : விஜயாஸனர் ( பரமபத நாதன்) உற்சவர் : எம்மடர் கடிவான் தாயார் : வரகுண வல்லி, வரகுணமங்கை தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவபுஷ்கரணி புராண பெயர் : வரகுணமங்கை ஊர் : நத்தம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிக்கல்

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிக்கல் 150.#சிக்கல்_சிங்காரவேலவர்_கோயில்_வரலாறு மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்) அம்மன் : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி) தல விருட்சம் : மல்லிகை தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி பாற்குளம் புராண பெயர் : மல்லிகாரண்யம், திருச்சிக்கல் ஊர் : சிக்கல் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: முன்பொரு சமயம் பஞ்சம் ஏற்பட்டபோது, விண்ணுலகில் இருக்கும் காமதேனு பசு, உணவு கிடைக்காமல் தவித்தது. அப்போது மாமிசத்தை தவறுதலாக உண்டுவிட்டது. இதையறிந்த சிவபெருமான், காமதேனுவை புலியாக மாறும்படி சபித்துவிட்டார். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்புகார்

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்புகார் 149.#அருள்மிகு_பல்லவனேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பல்லவனேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : சவுந்தர்யநாயகி தல விருட்சம் : மல்லிகை, புன்னை புராண பெயர் : பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் ஊர் : பூம்புகார் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர் ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர் கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பதிசாரம்

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்பதிசாரம் 148.#அருள்மிகு_திருவாழ்மார்பன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : திருவாழ்மார்பன் உற்சவர் : ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன் தாயார் : கமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி புராண பெயர் : திருவண்பரிசாரம் ஊர் : திருப்பதிசாரம் மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு: இந்த கோவிலில் திருமாலின் அவதாரமான திருவாழ்மார்பன் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் இரணியரை வதம் செய்த பின் தன் சினம் மாறாமல் நின்றார். அவரது ஆவேசம் அடங்கவில்லை. …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குமரகோட்டம்

June 18, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குமரகோட்டம் 144.#அருள்மிகு_குமரக்கோட்டம்_முருகன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : முருகன் புராண பெயர் : கச்சி ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு : படைப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நினைத்த பிரம்மதேவர், சிவபெருமானை தரிசித்து ஆலோசனை கேட்பதற்காக கயிலைக்கு வந்தார். அவசரமான காரியம் என்பதால், விரைந்து சென்ற அவர், முருகப்பெருமான் இருந்ததைக் கவனிக்காமல் கடந்து சென்றார். லீலைகள் செய்வதில் விருப்பம்கொண்ட பாலமுருகன் நான்முகனை வழிமறித்தார். விரைந்து செல்லும் காரணம் கேட்டார். அப்படியே பேச்சு நீள, …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிங்கப்பெருமாள் கோயில்

June 18, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிங்கப்பெருமாள் கோயில் 141.#அருள்மிகு_பாடலாத்ரி_நரசிம்மர்_(சிங்கப்பெருமாள்)_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாடலாத்ரி நரசிம்மர் உற்சவர் : பிரகலாதவரதர் தாயார் : அஹோபிலவல்லி தல விருட்சம் : பாரிஜாதம் தீர்த்தம் : சுத்த புஷ்கரிணி ஊர் : சிங்கப்பெருமாள் கோயில் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு : மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஐந்தாவது அவதாரம் நரசிம்ம அவதாரம். பக்தர்களாகிய பாகவதர்களின் பெருமையை எடுத்துக்கூறும் அவதாரம் இது. நரசிம்மர் அவதரித்த தலமாக கருதப்படுவது அஹோபிலம். நாடு முழுவதும் நரசிம்மருக்கு கோவில்கள் பல உள்ளன. …