அன்பாலும், எளிமையாலும் எதிர்கொள்ளும்படியாகவா இருக்கிறது இவ்வாழ்வு..?

இதற்கு முன்பும் இத்தனை முன்னேற்பாடுகளோடுதான் வாழ்வை எதிர்கொண்டோமா…?  போகிறபோக்கில் வாழ்வை கடக்கிற காலம் ஒன்று நமக்கு இருந்ததேயில்லையா? “எந்த நேரத்திலும், காலுக்கு கீழே பூமி பிளந்து தன்னை இழுத்துக்கொள்ளக்கூடும்” என்ற பதற்றமும், அச்ச உணர்வும் தினவாழ்வின் இயல்பாகிப்போயிற்று.

‘தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் சுயமோகிகளாக மனித மனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தரைக்குள்

கண்ணுக்குத் தெரியாத மைதானத்தில் நிகழும் மாயப்பந்தயத்தில், யாரையோ முந்த ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போதுமே பிரச்சனைகளோடு வாழப் பழகி விட்டோமே ஒழிய, ஆற அமர்ந்து பிரச்சனைகளைத் தீர்த்து பிரச்சனை இன்றி வாழ இயலாமல் போய்விட்டது. இந்த சூழலில், நம் பிரச்சனைகளுக்கு காரணம் வாஸ்து என்றொரு அறிவியல் சார்ந்த ஓர் விஷயத்தை பேச ஆரம்பித்தால்,அமிழ்த்தி வீழ்த்தவே மற்றவர்கள் பிறப்பெடுத்து வந்திருப்பதாக எல்லோரும் நம்புகிறோம். ஆதாரத்துடன் கைகுலுக்க நீளும் கரங்களுக்குள் ஆயுதம் துலாவுகிறோம். ஆனால் இது விரும்பிய வாழ்வில்லை, நிர்ப்பந்தம். மறுத்தால் இல்லாதொழிந்து விடுவோமோ என்ற பயத்தில், தற்காத்துக்கொள்ளலின் வெளிப்பாடு. ஓட்டத்தில் பின்தங்கிவிடக்கூடாது என்ற பதற்றத்தின் பக்க விளைவு. அதைத்தான் வலியது வெல்லும் எனச்சொல்லி நியாயப்படுத்திக் கொள்கிறோம். எல்லோரையும் சந்தேகிக்கிறோம்… புரட்சி செய்வதற்கு அல்ல. பிழைத்து வாழ்வதற்கு..!

வாஸ்து உண்மையில்லை ….

வாஸ்து ஏமாற்றுவித்தை …..

வாஸ்து பொய்

என்று சமூக அக்கறையோடு பதிவு செய்யப்படும் குற்றச்சாட்டுகளுக்கு என் பதில்

வாஸ்து என்பது உண்மை

வாஸ்து என்பது அறிவியல்

வாஸ்து என்பது மத சம்பந்தப்பட்ட விஷயமில்லை. வாஸ்துவில் யந்திரம், மந்திரம், பூஜை, தாயத்து மற்றும் கண்கட்டுவித்தைகளுக்கு வேலையில்லை.

பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்து மற்றொரு பாம்பின் விஷம் தான் என்பது உண்மையாக இருப்பின் வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு அந்த வீட்டிலேயே தான் உள்ளது என்பது நான் கண்ட உண்மை. இந்த உண்மையை உணராமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு என் பதிலாக மா சேதுங் – ன் வார்த்தைகளைத் தருகிறேன்.

விரல் சந்திரனை சுட்டுகிறது.

முட்டாள் விரலை பார்க்கிறான்…..!’