#கழுதையும்_ஊடகமும்!!!
ஒரு கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது
கழுதை கேட்டுக்
கொண்டதற்கு இணங்க
ஒரு பேய் இரவில் கயிற்றை
அறுத்து கழுதையை விடுவித்தது
கழுதை சென்று பக்கத்து விவசாயியின் நிலத்தில் பயிர்களை நாசம் செய்தது
இதனால் ஆத்திரமடைந்த விவசாயியின் மனைவி கழுதையை சுட்டுக் கொன்றார்
கழுதையின் உரிமையாளர் நஷ்டம் அடைந்தார்.பதிலுக்கு
அவர் விவசாயியின்
மனைவியைக் கொன்றார்
மனைவி இறந்ததால்
கோபமடைந்த விவசாயி
அரிவாளை எடுத்து கழுதையின் உரிமையாளரைக் கொன்றார்
கழுதையின் உரிமையாளருடைய மனைவி கோபமடைந்து அவளும் அவளுடைய அவள் மகன்களும் சேர்ந்து விவசாயியின் வீட்டிற்கு
தீ வைத்தனர்
விவசாயி தனது வீட்டை சாம்பலாக்கியதைப் பார்த்து
கழுதையின் உரிமையாளரின் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றார்
இறுதியாக
விவசாயி வருந்தியபோது,
அவர் பேயைக் கேட்டார்
ஏன் நீ அனைவரையும் கொன்றாய்?
பேய் பதிலளித்தது
நான் யாரையும் கொல்லவில்லை கழுதை கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் கயிற்றில் கட்டப்பட்டு இருந்த கழுதையை
மட்டுமே விடுவித்தேன்
உங்களுக்குள் இருந்த
பிசாசுகளை விடுவித்தவர்கள்
நீங்கள் அனைவரும் தான்
அதன் பிறகு நடந்த அனைத்து மோசமான விளைவுகளும் அது தான் விளைவித்தது
அந்த பேய் மாதிரிதான்
இன்றைய ஊடகங்களும்
இது தினமும் கழுதைகளை விடுவித்துக்கொண்டே இருக்கிறது
மக்கள் மாற்று சிந்தனை
இல்லாமல் ஒருவருக்கொருவர் எதிர்வினையாற்றுகிறார்கள் & வாதிடுகிறார்கள்
ஒருவரையொருவர் காயப்படுத்தி கொள்கிறார்கள்
இறுதியில் ஊடகங்கள்
எல்லா பொறுப்புகளையும் தட்டிக்கழிக்கின்றன
எனவே, ஊடகங்கள் வெளியிடும் ஒவ்வொரு கழுதைக்கும் நாம் எதிர்வினையாற்றாமல்
நாம் நமது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சமூகத்துடனான உறவைப் பேணுவது நமது பொறுப்பு
நன்றி பதிவு பகிர்வு:
பிச்சாங் கோ ராஜு
என்றும் அன்புடன்
Drஆண்டாள் P சொக்கலிங்கம்
